Tuesday, November 29, 2011
கலியுக தவம்
கானகம் சென்று கடவுள் காண
கண்மூடி உள்மந்திரம் சொல்லி
கரையான்கள் உடலில் புற்றுகள்
கட்டியதையும் உணராது
காலம் பல காத்து இருந்து
காட்சி தரும் கடவுளை
கண்ட பின்னரே கலைந்திடும் தவம்
கருத்துடன் பெற்றிடுவார் வரம்
கணப்பொழுதேனும் சிந்தித்து இருந்தால்
கள்ளம் இல்லா உலகம்
கவலை இல்லா வாழ்க்கை
காதல் கொண்ட மனம்
கற்புள்ள செயற்பாடுகள்
களிப்புடன் நகரும் வினாடிகள்
கோள்கள் பல பூமி போன்று
கணக்கில்லாத நல்ல வரங்கள்
கடவுளிடம் வரும் சந்ததியினருக்கு பெற்று
கருணை கொண்ட உலகம் உருவாக்கி
கலப்படம் இல்லாத வாழ்க்கை
கூட்டி தந்து கொண்டாடி இருக்கலாம்
காரணம் தெரியாது நல்ல
காரியம் செய்யாது போயினர்
கலக்கத்தில் இன்றைய வாழ்க்கை...
கடவுளை வேண்டி தவம் செய்ய
கானகமும் இல்லை நேரமும் இல்லை
தவம் புரிதல் இனி எளிதும் இல்லை
தவம் புரிய யாரேனும் புறப்பட தயார் எனில்
உலகம் செழிக்க ஒரே ஒரு வரம் கேளுங்கள்
கடவுள் நல்ல வரம் தருவார்
இக்காலத்தின் நிலைமை கண்டு
தவத்தின் நோக்கம் கண்டு
ஒருவேளை வராமலே இருந்து கொள்வார்
வரும் வரை புரியுங்கள் தவம்
தவம் புரிதல் என்பதே அதுதான்
தவத்தின் பலனை மற்றும்
முன்னோர்கள் போன்று மறந்து விடாதீர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
PlanetRadiocity.com International Celeb News |



No comments:
Post a Comment